4 -வது தென்னிந்திய முய் தாய் குத்துச்சண்டைப் போட்டி : 9 பதக்கங்களை வென்று கோவை குத்துச்சண்டை வீரர்கள் சாதனை

கோவை : தென்னிந்திய அளவில் நடைபெற்ற 4 -வது முய் தாய் குத்து சண்டைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், 9 பதக்கங்களையும் கைப்பற்றி கோவையை சேர்ந்த குத்துச் சண்டை வீரர்கள் குழு சாதனைப் படைத்துள்ளது.

கோவை : தென்னிந்திய அளவில் நடைபெற்ற 4 -வது முய் தாய் குத்து சண்டைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், 9 பதக்கங்களையும் கைப்பற்றி கோவையை சேர்ந்த குத்துச் சண்டை வீரர்கள் குழு சாதனைப் படைத்துள்ளது. 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 4 -வது தென்னிந்திய முய் தாய் குத்து சண்டைப் போட்டி நடைபெற்றது. அதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேடி, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 280 குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டி, வயது மற்றும் எடை அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளில் ஆண், பெண் இருவருக்கும் நடைபெற்றது. 

இந்த சாம்பியன்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கோவை அணியினர் தமிழ்நாட்டு சார்பில் 2 -ம் இடத்தைப் பிடித்தனர். இதில், நிஹாஸ் ராகித், நாஃபில், நலன், சாஜித், சஃப்ரின், ரியாஸ், தங்கரத்தினம், வினோத் மற்றும் பிரகாஷ் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் 3 - தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 



இதில், 16 வயதிற்குட்பட்டோருக்கான ஜீனியர் பிரிவில் நிஹாஸ் ராகித் தங்கமும், நாஃபில் மற்றும் நலன் வெள்ளியும், சாஜித் வெண்கலமும் வென்றனர். சீனியருக்கான 16 வயதினர், 50 கிலோ ஆண்களுக்கான பிரிவில் ரியாஸ் தங்கமும் மற்றும் அதே போட்டியில் பெண்களுக்கான பிரிவில் சஃப்ரின் தங்கமும் வென்று அசத்தினர். மேலும், 23 வயதினருக்கான பிரிவில் தங்கரத்தினம், 18 வயதினர் பிரிவில் வினோத் மற்றும் பிராகாஷ் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். 

Newsletter