மேட்டுப்பாளையத்தில் மாநில அளவிலான கபடி போட்டி : பட்டர்ஃபிளை அணி சாம்பியன்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த பட்டர்ஃபிளை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.


கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த பட்டர்ஃபிளை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.



கிச்சகத்தியூர் நண்பர்கள் மன்றம் சார்பில் நாக்கவுட் முறையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கபடி வீரர்கள் கலந்துகொண்டனர். மாநில அளவிலான இந்தக் கபடி போட்டிகளில், ஒவ்வோரு ஆட்டங்களுக்கும் சுமார் 30 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற ஈரோட்டைச் சேர்ந்த பட்டர்ஃபிளை அணியும், கோவை ரோகித் டெக்ஸ்டைல்ஸ் அணியும் மோதின. 



விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஈரோடு பட்டர்ஃபிளை அணி, கோவை அணியை 9-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி முதல் இடத்தைக் கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை கோவை ரோகித் டெக்ஸ்டைல்ஸ் அணியும், 3-வது இடத்தை சிறுமுகையை சேர்ந்த அஜீத் மெமோரியல் அணியும் பிடித்தன. முதலிடம் பிடித்த ஈரோடு அணிக்கு 6 அடி உயர சுழற்கோப்பையும், ரொக்கமும் வழங்கப்பட்டன. மேலும், இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடித்த அணிகளுக்கு நான்கு அடி உயர சுழற்கோப்பையும், பரிசுகளும் வழங்கப்பட்டன. 

Newsletter