உத்திரப்பிரதேசம் சென்று தடகள போட்டியில் தங்கம் வென்ற கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்

கோவை : கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம், மதுரா மாவட்டத்தில் இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் 53 -வது நேஷனல் க்ராஸ் கன்ட்ரி மீட் ஞாயிறன்று நடைபெற்றது. அதில், இந்தியாவில் உள்ள வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். வெவ்வேறு வயது பிரிவுகளில் நடைபெற்ற ரன்னிங் போட்டியில் சதீஷ் 18 வயதினருக்கான 6 கி.மீ ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டார்.


கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியின் 12 -ம் வகுப்பு மாணவன் சதீஷ்குமார். இவர் கடந்த 2018 -ம் ஆண்டில் தனது ஓட்டத்திறமைக்கு பலனாக மாவட்ட மற்றும் தேசிய அளவில் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். இந்த வருடம் அந்த வரிசையில், உத்திர பிரதேசம் சென்று தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து 17 தடகள வீரர்கள் இப்போட்டிக்குச் சென்ற போதும், சதீஷால் மட்டும் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது அவருடைய திறமையின் சான்றாகும். இது குறித்து சதீஷ், தனது பயிற்சியாளர் வைரவநாதன் தான் வெற்றிக்கு காரணம் எனவும், தனது கனவை நோக்கிப் பயணிக்க நம்பிக்கை அளிப்பவர் அவரே எனவும் கூறினார்.

Newsletter