39-வது மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை : கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை : கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

நேரு கல்வி நிறுவனம் மற்றும் தமிழக பளுதூக்கும் சங்கமும் இணைந்து நடத்திய 39-வது மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி, கோவையில் உள்ள நேரு ஏரோநாட்டிக்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. 49 கி., 55 கி., 61 கி., 67 கி., 73 கி., 81 கி., 89 கி., 96 கி., 102 கி., மற்றும் 102 கிலோவுக்கு அதிகமான எடைப்பிரிவுகளில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 



இதில், சேலம் மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் 2-வது இடத்தையும், நாமக்கல் 3-வது இடத்தையும் பிடித்தது. 



இதேபோல, ஜுனியர் பிரிவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி முதலிடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் 2-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு நேரு கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பி. கிருஷ்ணகுமார் பரிசுகளை வழங்கினர். 



Newsletter