கல்லூரிகளுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டி : பி.எஸ்.ஜி. கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஈரோட்டில் உள்ள பழனிசாமி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் உள்பட 8 பதக்கங்களுடன் 44 புள்ளிகளைப் பெற்று, பி.எஸ்.ஜி. கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பி.எஸ்.ஜி. கல்லூரி அணியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், கவி பிரகாஷ், ராஜ்குமார் மற்றும் பரணி ஆகியோர் தங்கமும், பால் எபினேஷர் மற்றும் மகேஷ்வரன் ஆகியோர் வெள்ளியும், கார்த்தி, சூர்யகுமார் ஆகியோர் வெண்கலமும் பிடித்தனர். கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 2-வது இடத்தைப் பிடித்தது. 

பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற இந்தக் குத்துச்சண்டைப் போட்டியில் 25 கல்லூரிகளைச் சேர்ந்த 75 மாணவர்கள் பல்வேறு எடைப்பிரிவின் கீழ் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter