சர்வதேச பயிற்சியாளரை நியமித்தது ஃபர்ஸ்ட் கிக் கால்பந்து அகாடமி

கோவை : தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில், ஃபர்ஸ்ட் கிக் கால்பந்து அகாடமியின் பயிற்சியாளராக, சர்வதேச பயிற்சியாளர் உரிமம் பெற்ற ரூனி செட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை : தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில், ஃபர்ஸ்ட் கிக் கால்பந்து அகாடமியின் பயிற்சியாளராக, சர்வதேச பயிற்சியாளர் உரிமம் பெற்ற ரூனி செட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் உரிமம் பெற்ற பயிற்சியாளரான இவர், கோவையில் இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கி வரும் ஃபர்ஸ்ட் கிக் கால்பந்து பள்ளியின் தொழில்நுட்ப இயக்குநராகவும், அகாடமியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிஃபா கால்பந்து போட்டியின் பயிற்சியாளர்களுக்கான ஆலோசகராகவும் இருந்துள்ளார். 



இந்த நிலையில், இவரது தலைமையின் கீழ், 7 முதல் 17 வயது வரையிலான வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இன்று முதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள வருகிறது. காலை, மாலை என இருவேளைகளில் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. ஃபர்ஸ்ட் கிக் கால்பந்து அகாடமியில் பயிற்சி பெறும் வீரர்கள், 13 வயதுக்குட்பட்ட ஐ லீக் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும், ஐ-லீக், ஐ.எஸ்.எல். சப்-ஜுனியர் மற்றும் ஜுனியர் அளவிலான தேசியப் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெறுகின்றனர். 

"ஃபர்ஸ்ட் கிக் கால்பந்து அகாடமியில் இணைந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இளம் வீரர்களுடனும், பயிற்சியாளர்களுடன் பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்," என்கிறார் ரூனி செட்டி.

Newsletter