ஆசியன் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் அசத்திய கோவை வீராங்கனை

கோவை : ஆசியன் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் மகுடம் சூடிய இந்திய அணியில் கோவையைச் சேர்ந்த மாணவி இடம்பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கோவை : ஆசியன் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் மகுடம் சூடிய இந்திய அணியில் கோவையைச் சேர்ந்த மாணவி இடம்பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.



ஆசியன் த்ரோபால் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற சர்வதேச த்ரோபால் போட்டிகள் பெங்களூரூவில் நடைபெற்றது. இதில், சிறப்பாக ஆடிய இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த அணியில் கோவை மாவட்டம் பி.எஸ்.ஜி. கல்லூரியில் சமூகவியல் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி பி. இந்துவும் இடம்பிடித்திருந்தார். இவர், இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாகவும் இருந்துள்ளார். 



சிறுவயது முதலே ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், த்ரோபால் விளையாட்டில் ஈடுபட்டார். கடந்த 8 ஆண்டுகளில் அவர் தமிழக அணிக்காக விளையாடினார். தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து, சிறப்பாக ஆடிய இந்து, இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகாவில் நடைபெற்ற இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையிலான முதல் போட்டியில், சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

இது குறித்து சிம்ப்ளிசிட்டியிடம் வீராங்கனை இந்து கூறுகையில், "நாட்டிற்காக விளையாடி பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணியில் இடம்பிடிக்க மிகவும் உழைத்தேன். எதிர்பாராதவிதமாக, கடந்த ஆண்டு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டேன். ஆனால், இந்த ஆண்டு இந்திய அணியில் தேர்வாகி, நாட்டிற்காக விளையாடினேன். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவேன்," என்றார். 

Newsletter