கோவையில் நாளை மூத்தோர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி : 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை : பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் மூத்தோர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி கோவையில் நாளை நடக்கிறது.

கோவை : பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் மூத்தோர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி கோவையில் நாளை நடக்கிறது. 

கோவை சென்ட்ரல் எக்ஸைஸ் ரீகிரியேஷன் கிளப் மற்றும் கோவை மாவட்ட மூத்தோர் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பினர் சேர்ந்து 4-வது மாநில அளவிலான மூத்தோர் டேபிள் டென்னிஸ் போட்டி நாளை நடக்கிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 103 வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி ஜி.எஸ்.டி. பவனில் நடக்கிறது. 40 வயதிற்கு மேற்பட்டோர், 50, 60, 65 மற்றும் 70 வயதுடையவர்கள் என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், பெண்களுக்கான சிறப்பு பிரிவும், இரட்டையர் பிரிவு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. 

இதில், வேலாயுதம், கல்யாணராமன், ராமலிங்கம், எம்.எஸ். சுப்ரமணியம், இருதயராஜ் போன்ற அனுபவ வீரர்களும் முத்திரைப் பதிக்க உள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.26,000 மதிப்பிலான ரொக்கப்பரிசும், கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் வெற்றி பெறுபவர்கள், அடுத்த மாதம் 12 முதல் 17-ம் தேதி வரை இந்தூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். 



இந்தப் போட்டியினை மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி வரித்துறை ஆணையர் ஜி. ஸ்ரீனிவாச ராவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீ சானில் சிவதாஸ், கோவை சென்ட்ரல் எக்ஸைஸ் ரீகிரியேஷன் கிளப்பின் செயலாளர் முரளிதர், கோவை மாவட்ட மூத்தோர் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் சங்கர் மணிவண்ணன் ஆகியோர் இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். 

Newsletter