ஆர். கோவிந்தராஜுலு நினைவு கோப்பை கைப்பந்து போட்டியில் சின்னத்தடாகம் அணி சாம்பியன்

கோவை : ஆர். கோவிந்தராஜுலு நினைவு கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் சின்னத்தடாகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : ஆர். கோவிந்தராஜுலு நினைவு கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் சின்னத்தடாகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 



கோவை மாவட்ட கைப்பந்து சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் ஆண்கள் இறுதிப் போட்டியில் சின்னத்தடாகம் அணியும், பாரதியார் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், 2-1 என்ற செட் கணக்கில் சின்னத்தடாகம் அணி வெற்றி பெற்று கோப்பையை உச்சி முகர்ந்தது. இதைத் தொடர்ந்து, 3-வது இடத்திற்கான போட்டியில், கவி வி.சி. அணி 2-1 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. விடுதி அணியை தோற்கடித்தது. 



இதேபோல, பெண்களுக்கான இறுதிப் போட்டியில், தடாகத்தைச் சேர்ந்த லோட்டஸ் அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஏ.பி.சி. வாலிபால் கிளப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியை தோற்கடித்த கருடா ரீகிரியேஷன் கிளப் 3-வது இடத்தைப் பிடித்தது. 

இந்தப் போட்டியில் எஸ்.டி.ஏ.டி. விடுதி அணியின் செல்வகணேஷ் மற்றும் பாரதியார் அணியின் ஞானசெல்வன் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ. 45,000 மதிப்பிலான பரிசுப் பொருட்களை கோவை மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் வழங்கினார். 

Newsletter