திருப்பூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

திருப்பூர் : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் இன்று தொடங்கி வைத்தார். 



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம், கபடி மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. ஆண், பெண் இருபாலாருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டிகள் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்திலும், பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்திலும் நடக்கிறது. 



இந்தப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி இன்று தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

Newsletter