பச்சையப்பா கல்லூரியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது பி.எஸ்.ஜி. கல்லூரி

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான 28-வது மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பச்சையப்பா கல்லூரி அணியை வீழ்த்தி பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான 28-வது மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பச்சையப்பா கல்லூரி அணியை வீழ்த்தி பி.எஸ்.ஜி. கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. 



கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான 28-வது மாநில அளவிலான கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் 12 அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில், பச்சையப்பா கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி. கல்லூரி அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில், 17-வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி. அணியின் அஜமிர் ராஜா கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதைத் தொடர்ந்து, கிடைத்த பல்வேறு கோல் வாய்ப்புகளை இரு அணியின் வீரர்களும் தவறவிட்டனர். இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி. அணி வெற்றி பெற்று, கோப்பையைக் கைப்பற்றியது.

இந்தத் தொடரில், சிறந்த வீரராக பி.எஸ்.ஜி. கல்லூரி அணியின் சைலு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

வெற்றி பெற்ற அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை எஃப்சி அணியின் கோல் கீப்பர் பயிற்சியாளருமான வி.பி. சதீஷ்குமார் வழங்கினார். இந்த நிகழ்வில், பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியின் முதல்வர் டி. பிருந்தா, அக்கல்லூரியின் செயலாளர் டி.கண்ணையன், உடற்கல்வி இயக்குநர் பி. நவநீதன் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநர் ஆர். சவுந்தரராஜன் கலந்து கொண்டனர். 

Newsletter