தென்னிந்திய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி 2019-க்கான இலச்சினை வெளியீடு

கோவை : கோவையில் நடைபெற இருக்கும் தென்னிந்திய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி 2019-க்கான இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் நடைபெற இருக்கும் தென்னிந்திய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி 2019-க்கான இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அமெச்சூர் மாநில பளுதூக்கும் சங்கம், கோவை மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் நேரு கல்வி குழுமமும் இணைந்து தென்னிந்திய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடத்துகிறது. ஜுனியர், சீனியர் என ஆண், பெண் இருபாலாருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டி, வரும் 15-ம் தேதி கோவை திருமலையாம்பாளையத்தில் உள்ள நேரு கல்வி குழுமத்தில் நடத்தப்படுகிறது. 

இந்த நிலையில், தென்னிந்திய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி 2019-க்கான இலச்சினை இன்று வெளியிடப்பட்டது. இதனை நேரு கல்வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் கிருஷ்ணகுமார் மற்றும் தென்னிந்திய பளுதூக்கும் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு பளுதூக்கும் சங்கத்தின் துணை தலைவர் ஏ.முரளிதரன், கோவை மாவட்ட பளுதூக்கும் சங்கத்தின் தலைவர் ஜி.கே. செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வெளியிட்டனர்.

Newsletter