கோவையில் நடந்த சர்வதேச சைக்கிள் போட்டியில் சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை : எம்.வி.எஸ். கிரிட்டோரியம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச சைக்கிள் போட்டியில், வயது வித்தியாசமின்றி சுமார் 1,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கோவை : எம்.வி.எஸ். கிரிட்டோரியம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச சைக்கிள் போட்டியில், வயது வித்தியாசமின்றி சுமார் 1,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 



கோவையில் 6-ம் ஆண்டு பதிப்பாக ‘‘தி எம்.வி.எஸ் கார்னிவெல் 2019’’ சைக்கிள் போட்டியை எம்.வி.எஸ். கிரிட்டோரியம், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் இணைந்து செட்டிபாளையம் கரிமோட்டார் ஸ்பீடு வே-யில் இன்று நடத்தியது. 

இப்போட்டியானது, தொழில்ரீதியாக பந்தய வீரர்கள், சாதாரண ஆண்கள், பெண்கள், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் ஆண்கள், பெண்கள், 55 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இறுதிச்சுற்று ஸ்காட் எக்ஸ்சி தொடர், எம்.வி.எஸ். என்டியூரா 2019 ஆகிய போட்டி தனியாக நடந்தது.. இதில், முதல் 5 இடங்களைப் பெற்றவர்களுக்கு சுமார் ரூ. 24,000 மதிப்பிலான ஸ்காட் ஸ்போர்ட்ஸ் இன்டியா ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியானது, ரிலே ரேஸ், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மகளிர், ஆண்கள், மாஸ்டர் பெண்கள், மாஸ்டர் ஆண்கள், எலைட், முதியோர் ஆண், பெண்கள் என்ற பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.



இந்த சைக்கிள் திருவிழா குறித்து ஸ்காட் ஸ்போர்ட்ஸ் இன்டியா மேலாளர் ஜெய்மின் ஷா கூறுகையில், ’’எம்.வி.எஸ். சைக்கிளிங் திருவிழாவில் மீண்டும் பங்கேற்றதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். நாட்டின் முன்னணி சைக்கிள் பந்தயத்தில், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய திறமையானவர்கள் உருவாகி வருகின்றனர். ஸ்காட் 60-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 30 இடங்களில், ஒரே சமயத்தில் இந்தப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், 1,200 சைக்கிள் ஓட்டுவோர் பங்கேற்றனர். சில 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பங்கேற்றனர்.



இந்த அளவுக்கு சிறப்பான வரவேற்பைப் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், பங்கேற்ற அனைவரது ஆர்வமும் பாராட்டுக்குரியது. சைக்கிள் பந்தய போட்டிகள் வளர்ச்சி பெற்றுள்ளதையும், திறமையையும் எம்.வி.எஸ். சைக்கிளிங் விழா போன்ற நிகழ்வுகளால் பார்க்க முடிகிறது,’’ என்றார்.

Newsletter