உதகையில் முதன்முறையாக சிலம்பாட்டம் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

நீலகிரி : தமிழ்நாடு சிலம்பாட்டம் கழகம் சார்பில் உதகையில் முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி தொடங்கியது.

நீலகிரி : à®¤à®®à®¿à®´à¯à®¨à®¾à®Ÿà¯ சிலம்பாட்டம் கழகம் சார்பில் உதகையில் முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி தொடங்கியது. 



தமிழ்நாட்டின் வீர விளையாட்டுகளில் ஒன்று சிலம்பாட்டம். இக்கலை பல்வேறு காரணங்களால் அழிந்து வரும் நிலையில் உள்ளது. இதனை வளர்க்கும் விதமாக, தமிழ்நாடு சிலம்பாட்டம் கழகம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம், உதகை பிரிக்ஸ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதன்முறையாக சிலம்பாட்டம் பயிற்சி, நீலகிரி சிலம்பாட்டம் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள் வளர்த்த இந்த கலையை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தலைமை பயிற்சியாளர் தெரிவித்தார். 


Newsletter