சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் கோவை வீராங்கனைக்கு வெண்கலம்

கோவை : சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் கோவையைச் சேர்ந்த நிவேதா என்ற வீராங்கனை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவை : சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் கோவையைச் சேர்ந்த நிவேதா என்ற வீராங்கனை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். 

நெதர்லாந்து நாட்டில் ஹகு பகுதியில் 42-வது சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் நடந்த இந்தப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் கோவையைச் சேர்ந்த பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை முதலாம் ஆண்டு மாணவி பி. நிவேதா கலந்து கொண்டார். 



தமிழகம் சார்பில் பங்கேற்ற ஒரேயொரு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அவர், முதல்நாளில் தனிநபருக்கான போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்தார். 2-வது நாளில் குழுப் பிரிவு போட்டியில் வெள்ளி வென்று அசத்தினார். இதைத் தொடர்ந்து, 3-வது நாளில் நடைபெற்ற தனிநபர் பிரிவில் 216.1 புள்ளியைப் பெற்று வெண்கலத்தை தட்டிச் சென்றார். தனிநபர் பிரிவின் முதல் இரண்டு இடங்களை சீன நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் பிடித்தனர். 

Newsletter