முதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி : கற்பகம் பல்கலை,. இந்துஸ்தான் கல்லுாரி அணிகள் வெற்றி

கோவை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான ஹேண்ட்பால் போட்டியில் கற்பகம் பல்கலை அணி, இந்துஸ்தான் கல்லுாரி அணி முதலிடம் பெற்றது.

கோவை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான ஹேண்ட்பால் போட்டியில் கற்பகம் பல்கலை அணி, இந்துஸ்தான் கல்லுாரி அணி முதலிடம் பெற்றது. 



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (கோவை) சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, நேற்று ஈச்சனாரி கற்பகம் பல்கலையில், மாணவ, மாணவியருக்கான ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது. பிப்ரவரி 5ம் தேதி தொடங்க இந்த போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் உட்பட 13 அணிகள் பங்கேற்றன. 

இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியினை ஈச்சனாரி கற்பகம் பல்கலையின் டீன் ஆர்.சுந்தராஜன் தொடங்கி வைத்தார். இதில், பெண்கள் பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், அனைத்து போட்டிகளையும் சாமர்த்தியமாக விளையாடி அதிகபட்ச புள்ளிகளுடன் கற்பகம் பல்கலை முன்னேறியது. இது போலவே, ஆண்கள் பிரிவில் இந்துஸ்தான் கல்லுாரி அணி பி.எஸ்.ஜி அணியை வீழ்த்தி வெற்றி வாய்ப்பைத் தட்டியது. 

Newsletter