தேசிய அளவிலான ஹாக்கிபோட்டியில் நீல்கிரிஸ் அணி 2ம் இடம் : வெற்றி பெற்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

நீலகிரி : தேசிய அளவில் நடைபெற்ற ஹாக்கிபோட்டியில் முதல் முறையாக இரண்டாவது இட‌த்தை பிடித்த ஹாக்கி நீல்கிரிஸ் அணியினருக்கு, இன்று குன்னுாரில் பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி : தேசிய அளவில் நடைபெற்ற ஹாக்கிபோட்டியில் முதல் முறையாக இரண்டாவது இட‌த்தை பிடித்த ஹாக்கி நீல்கிரிஸ் அணியினருக்கு, இன்று குன்னுாரில் பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தேசிய அளவில் 30வது கே.டி.சிங் பாபு நினைவு கோப்பை ஹாக்கி போட்டி 14 வயதிற்குட்பட்டோருக்கு நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் 24ம் தேதி தொடங்கிய இந்த போட்டி பிப்ரவரி 2 வரை லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்ஸாம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து அணிகள் பங்குபெற்றன. தமிழகத்திலிருந்து 3 அணிகள் பங்கு பெற்றன. 



இந்த போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. தமிழகத்திலிருந்து பங்குபெற்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஹாக்கி நீல்கிரிஸ் அணியினர் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று, இறுதி போட்டியில் உத்தரபிரதேச அணியினருடன் கடுமையாக போராடி தோல்வி அடைந்ததால் இரண்டாவது இடத்தை பெற்றது. 

கடந்த 30 வருடங்களாக தேசிய அளவில் நடைபெறும் இந்த போட்டியில் முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த ஹாக்கி நீல்கிரிஸ் அணியினர் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. எனவே, ஹாக்கி நீல்கிரிஸ் அணியினருக்கு குன்னுாரில் வைத்து, நீலகிரி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாகவும், பொது மக்கள் சார்பாகவும் பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகள் மலர் கொடுத்தும், மாலை அணிவித்தும் வீரர்களை வரவேற்றனர். 



இதுகுறித்து நீலகிரி ஹாக்கி சங்க தலைவர் அனந்த கிருஷ்ணன் கூறியதாவது :- நீலகிரி மாவட்டத்தில் செயற்கை இழை மைதானம் இல்லை. இதனை அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கையாக முன் வைத்துள்ளோம். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக, இந்த அணி 25 நாட்களாக ராமநாதபுரத்தில் உள்ள செயற்கைஇழை மைதானத்தில் பயிற்சி பெற்றதாலே வெற்றி பெற முடிந்தது. 

ஆகையால், நீலகிரி மாவட்டத்தில் செயற்கை இழை மைதானம் அரசு அமைத்துக் கொடுத்தால் நீலகிரி மாவட்டம் ஹாக்கியில் சாதிக்கும், என்றார். 

Newsletter