2024 -ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எதிர்நோக்கியிருக்கும் கோவையைச் சேர்ந்த இளம் நீச்சல் வீராங்கனை

கோவை : 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் முத்திரைப் பதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் கோவையைச் சேர்ந்த இளம் வீராங்கனை தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.

கோவை : 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் முத்திரைப் பதிக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் கோவையைச் சேர்ந்த இளம் வீராங்கனை தீவிர பயிற்சி பெற்று வருகிறார். 

கோவையில் உள்ள பாரதிய வித்யா பவன் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், பாவிகா துகார் என்ற மாணவி 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தாய் மாநில அளவிலான நீச்சல் வீராங்கனையாவார். தனது தாயின் ஊக்கத்தின் காரணமாக பாவிகா துகார், தனது 3 வயதில் இருந்து நீச்சல் போட்டியைக் கற்று வருகிறார். ஆரம்ப கட்டத்தில் விருப்பமில்லாமல் நீச்சலைக் கற்று வந்த அவர், சில போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்று குவித்ததால், ஆர்வம் அதிகரித்தது. 



இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த கேலோ-இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ் போட்டியில், 21-வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், 200மீ, 400மீ, 800மீ மற்றும் 1,500மீ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் 4 தங்கப் பதக்கமும், 4*100 ரிளே மற்றும் 4*100 மெட்ளே போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 

"ஆரம்ப கட்டத்தில் பாவிகாவிற்கு நீச்சல் போட்டி, மிகவும் கடினமானதாகத்தான் இருந்தது. பின்னர், கடின உழைப்பும், பொறுமையும் தேவை என்பதை அவர் உணர்ந்து செயல்பட்டார். பாவிகாவிற்கு 5 வயதாக இருக்கும் போது, ஜென்னிஸ் ரெசிடென்ஸி நீச்சல் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றார். அதில், சிறந்த இளம் வீராங்கனை என்ற விருதை அவர் பெற்றார். இது மேலும் அவருக்கு நீச்சல் மீதான ஆர்வத்தை தூண்டியது," என்கிறார் பாவிகா துகாரின் தாயார் சில்பா துர்கா.



இதைத் தொடர்ந்து, 8 வயது முதல் அவர் ஜென்னிஸ் ரெசிடென்ஸி நீச்சல் கிளப்பில் ரமேஷ் என்பவரிடம் பயிற்சி பெற்றார். பின்னர், மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார். இந்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் முதல்முறையாக வெண்கலம் வென்றார். 2015-ம் ஆண்டில் ஏசியன் ஏஜ் நீச்சல் போட்டியின் ஜுனியர் பிரிவு போட்டி, பாவிகா துகாரின் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது. பெண்களுக்கான 1,500 ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 6-வது இடம் பிடித்து அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பினார். இதன்மூலம், இதற்கு அடுத்த ஆண்டே, துருக்கியில் உலக நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றார்.

"ஆரம்பத்தில் முதலில் நீச்சல் போட்டியில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். தற்போது, நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது கனவாக உள்ளது. கேலோ இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ் போட்டியில் 5 பதக்கங்கள் வென்றதே எனது வாழ்வின் மிகப்பெரிய சாதனையாகும். தற்போது, தனது கனவை நினைவாக்கும் விதமாக நாள்தோறும் 5 மணி நேரம் பயிற்சி செய்கிறேன்," என்றார் பாவிகா துகார்.

Newsletter