தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் 17 பதக்கங்கள் வென்றது கோவை அணி

கோவை : தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், கோவை புலியகுளம் சிலம்பாலயா கிளப் அணி 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை வென்று குவித்தன.

கோவை : தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில், கோவை புலியகுளம் சிலம்பாலயா கிளப் அணி 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை வென்று குவித்தன. 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.,கல்லுாரி சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி அதே கல்லுாரி வளாகத்தில் நடந்தது. நாடு முழுவதிலுமிருந்து 900 வீரர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 

அதில், எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளியின் ஸ்ரீவர்சன், புனித அந்தோணியார் பள்ளியின் சைனிரிச், கார்மல் கார்டன் மோனிஷ், ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியின் பிரியதர்ஷினி, சாருகேந்தினி, கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பூஜா, ஒய்.டபிள்யூ.ஏ., பள்ளியின் பிரிஸ்சில்லா ஏஞ்சல், ஏ.எல்.ஜி.,பள்ளியின் கிருஷ்ணகுமார், எஸ்.என்.ஆர்.,கல்லுாரியின் அருண் பாண்டியன், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் நிவேதிதா ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக விளையாடி 9 தங்கமும், 3 வெள்ளியும், 7 வெண்கல பதக்கங்களும் பெற்றனர். 

இதையடுத்து, புலியகுளம் சிலம்பாலயா கிளப் தலைவர் செல்வக்குமார், பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார் ஆகியோர், வெற்றி பெற்றவர்களை பாராட்டினர். 

Newsletter