கோவை உள்பட 4 மாவட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

கோவை : கோவை, ஈரோடு உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டில் போட்டிகள் கோவை எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று தொடங்கியது.

கோவை : கோவை, ஈரோடு உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டில் போட்டிகள் கோவை எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று தொடங்கியது.



கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த பொறியியல் கல்லூரிகள் ஒருங்கிணைத்து செண்ட்டிஸ் (CENTIES) என்ற கிளப் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு சமூக வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதே இந்த கிளப்பி நோக்கமாகும். மேலும், இந்த கொங்கு மண்டலத்தில் திறமையுள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் வகையில், இந்த கிளப்பின் மூலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற முதல் செண்ட்டிஸ் போட்டி வெறும் இரு போட்டிகளை கொண்டே நடத்தப்பட்டது.



இந்த நிலையில், கோவை எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று தொடங்கிய 10-வது செண்ட்டிஸ் போட்டியில், ஆண்களுக்கு 13 விதமான போட்டிகளும், பெண்களுக்கு 9 விதமான போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதில், 4 மாவட்டங்களில் இருந்தும் 25 அணிகள் பங்கேற்றுள்ளன.

முதல் நாளில் கோ-கோ, வாலிபால், த்ரோ பால், பேட்மிண்டன், பால் பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பால் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளாலர் பெண்கள் கல்லூரி மற்றும் எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதேபோல, கோ-கோ போட்டியில், குமரகுரு தொழில்நுட்பம் கல்லூரி எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.



“விளையாட்டுத் துறையில் ஒவ்வொருவரும் சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, வாழ்க்கை குறித்து அறிய உதவுவதாக நம்புகிறோம். மேலும், ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் பயிற்சி பெறுவதற்கான சிறந்த தளமாகவும், சமூக வித்தியாசமின்றி முன்னேற வேண்டும் பெற எண்ணத்தை உருவாக்குகிறது,” என்றார் செண்ட்டிஸ் கிளப்பி நிறுவன உறுப்பினர் எஸ். சோமசுந்தரமூர்த்தி.

Newsletter