கோவையில் தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டிகள் தொடக்கம்

கோவை : நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் நேற்று தொடங்கப்பட்டது.


கோவை : நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் நேற்று தொடங்கப்பட்டது. 



தென்னிந்திய அளவிலான இந்த போட்டிகளை தமிழ்நாடு அமெச்சூர் மாநில பளுதூக்கும் சங்கம், கோவை மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் மற்றும் கோவை நேரு கல்வி குழுமங்கள் இணைந்து நடத்துகின்றன. சிறுவர்கள், இளைஞர், சீனியர் மற்றும் ஜுனியர் ஆகிய பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டிகள் திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வளாகத்தில் தொடங்கியது. நேற்று தொடங்கிய இப்போட்டிகள் வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. 

தொடக்க விழாவில், தமிழ்நாடு பளுதூக்கும் சங்க துணைத் தலைவரும், நேரு கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு இயக்குனருமான à®….முரளிதரன் பங்கேற்றவர்களை வரவேற்றார். நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான டாக்டர்.பி. கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். தென்னிந்திய பளுதுக்குவோர் சங்க தலைவர் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற எம்.தமிழ்செல்வன், கௌரவ விருந்தினராக காந்திபுரம் பகுதி, à®….தி.மு.க. செயலாளர் கே.ஆர்.ராஜன், கோவை மாவட்ட அமெச்சூர் மாநில பளுதூக்கும் சங்க புரவலர் ஏ.பி.சிவகுமார், உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 



இந்த தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில், தமிழக சார்பில் 50 ஆண்களும், 50 பெண்களும் கலந்து கொண்டனர். கேரள மாநிலத்தில் இருந்து 25 ஆண்களும், 20 பெண்களும் கலந்து கொண்டனர். கர்நாடகாவில் இருந்து 35 ஆண்களும், 30 பெண்களும் கலந்து கொண்டனர். சீமாந்திராவில் இருந்து 30 ஆண்களும், 30 பெண்களும் கலந்து கொண்டனர். தெலுங்கானாவில் இருந்து 25 ஆண்களும், 25 பெண்களும் கலந்து கொண்டனர். பாண்டிச்சேரியில் இருந்து இருந்து 30 ஆண்களும், 25 பெண்களும் கலந்து கொண்டனர்.

மேலும், விழாவிற்கான ஏற்பாடுகளை நேரு கல்வி நிறுவனங்களின் விளையாட்டு துறை இயக்குனர் செந்தில், பளுதூக்கும் சங்க செயலாளர் சுந்தரம், நிர்வாகிகள், நேரு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் செய்து இருந்தனர். விழா முடிவில் தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்க பொது செயலாளர் .டி. நவராஜ் பல்கானின் டேனியல் நன்றி கூறினார். 

Newsletter