கோவையில் தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டி : தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சாம்பியன்

கோவை : கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 'தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி' சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 'தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி' சாம்பியன் பட்டம் வென்றது. 

தமிழ்நாடு அமெச்சூர் மாநில பளுதூக்கும் சங்கம், கோவை மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்கம் மற்றும் கோவை நேரு கல்வி குழுமங்கள் இணைந்து தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் (சிறார் இளைஞர், சீனியர் மற்றும் ஜுனியர்) பங்குபெறும் பளுதூக்கும் போட்டி, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றன. 



இதனுடைய நிறைவு விழாவில், நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான டாக்டர்.பி.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மேலும், புதுச்சேரி மாநில ஸ்போர்ட்ஸ் கவுன்சில் மெம்பர் (ஓய்வு) ஜி.குணசேகரன், கோவை தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் ஜெ.எம்.பெர்ணான்டோ, ஆந்திரா மாநில கீதனகொண்டா, சிபிஆர் எஜுகேசன் அண்டு ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சிபிஆர் பிரசாத் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் மாநில பளுதூக்கும் சங்க தலைவர் எஸ்.டி. பொன் செல்வன், தென்னிந்திய பளுதுக்குவோர் சங்க தலைவரும் அர்ஜுனா விருது பெற்றவருமான எம்.தமிழ்செல்வன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இந்த போட்டிகளில், ஆண்கள் பிரிவில், 55 கிலோ எடை பிரிவு போட்டியில், ஆந்திராவை சேர்ந்த பி.ரமேஷ் முதல் இடத்தையும், தமிழகத்தை சேர்ந்த எம்.நவீன் குமார் இரண்டாம் இடத்தையும், தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த பி. பிரகாஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 

61 கிலோ எடை பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஆர்.அரவிந்தன், கேரளாவைச் சேர்ந்த ஆர்.மகேந்திரன், ஆந்திராவை சேர்ந்த பி. ராஜபாபு ஆகியோர் முறையே முதல் 3 இடத்தையும் பிடித்தனர். 67 கிலோ எடை பிரிவில் ஆந்திராவை சேர்ந்த கோடீஸ்வரராவ் முதலிடத்தையும், தமிழகத்தை சேர்ந்த மகாராஜன் இரண்டாமிடத்தையும், பாண்டிச்சேரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 

மேலும், 73 கிலோ எடை பிரிவில் ஆந்திராவை சேர்ந்த டி.எச்.வி. நாயுடு முதலிடத்தையும், தமிழகத்தை சேர்ந்த பழனிவேல் ராஜன், கோபி ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 81 கிலோ எடைபிரிவில் தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் மற்றும் கனிமலை ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்தனர். மூன்றாமிடத்தை பாண்டிச்சேரியை சேர்ந்த அகிலேஷ்வர் பிடித்தார். 

89 கிலோ எடைபிரிவில் பாண்டிச்சேரியை சேர்ந்த எம்.ஹரிஹரன் முதலிடத்தை பிடித்தார். 96 கிலோ எடைபிரிவில் தெலுங்கானவைச் சேர்ந்த பூர்ணசந்திரராவ் முதலிடத்தையும், ஆந்திராவைச் சேர்ந்த சாய் விஷ்ணு இரண்டாமிடத்தையும் பிடித்தனர். 102 கிலோ எடைபிரிவில் தமிழகத்தை சேர்ந்த அனிஷ்குமார் முதலிடம் பிடித்தார். 109 கிலோ எடைபிரிவில் தமிழகத்தை சேர்ந்த அபிராம் முதலிடத்தையும் பாண்டிச்சேரியை சேர்ந்த சங்கர் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். 

109 கிலோ எடைக்கு மேல் பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த சிவ கிஷோர், ராஜசேகர் ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாமிடத்தையும் பிடித்தனர், தமிழகத்தை சேர்ந்த சித்தார்தன் மூன்றாம் இடத்தை பிடித்தார். குறிப்பாக, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக ஆண்கள் அணியினர் வென்றனர். 

இதைப் போலவே, பெண்கள் பிரிவில், 45 கிலோ எடைபிரிவில் தமிழகத்தை சேர்ந்த நித்யா, ஆந்திராவை சேர்ந்த அனுஷா மற்றும் பாவி கிருஷ்ணா முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். 49 கிலோ எடைபிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஜெசிந்தா ஜாக்குலின் முதல் பரிசையும், ஆந்திராவைச் சேர்ந்த நித்யாஞ்ஜலி மற்றும் சிவாஞ்சலி ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர். 

55 கிலோ எடைபிரிவில் தமிழகத்தை சேர்ந்த தமிழரசி மற்றும் அகல்யா ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாமிடத்தை பிடித்தனர். ஆந்திராவை சேர்ந்த ரச்சனா மூன்றாமிடத்தை பிடித்தார். 59 கிலோ எடைபிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிரிந்தா முதலிடம் பிடித்தார். 64 கிலோ எடைபிரிவில் ஆந்திராவைச் சேர்ந்த ஜி.அஸ்வினி முதல் இடத்தை பிடித்தார். 71 கிலோ எடைபிரிவில் பண்டிச்சேரியை சேர்ந்த கோமலா முதலிடத்தையும், ஆந்திராவை சேர்ந்த கீர்த்தி இரண்டாம் இடத்தையும் பிடித்தார். 76 கிலோ எடைபிரிவில் தமிழகத்தை சேர்ந்த திவ்யா முதலிடத்தையும், மேனகா இரண்டாமிடத்தையும் பிடித்தனர். 

81 கிலோ எடைபிரிவில் தெலுங்கானவை சேர்ந்த சுகன்யா முதலிடத்தையும், தமிழகத்தை சேர்ந்த சுபரஞ்ஜனி இரண்டாமிடத்தையும், ஆந்திராவை சேர்ந்த பூஜா பிரவலிகா மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 87 கிலோ எடைபிரிவில் தமிழகத்தை சேர்ந்த கனிமொழி முதலிடத்தையும், சுவேதா இரண்டாமிடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக பெண்கள் அணியினர் வென்றனர். 

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நேரு கல்வி நிறுவனங்களின் விளையாட்டு துறை இயக்குனர் செந்தில் பளுதூக்கும் சங்க செயலாளர் சுந்தரம், நிர்வாகிகள், நேரு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் செய்தனர். 

Newsletter