தேசிய சைக்கிளிங் போட்டி : தமிழகம் சார்பில் 8 பதக்கங்களை வென்றது கோவை

கோவை : மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில், கோவை மாவட்டத்திற்கு 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கோவை : மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில், கோவை மாவட்டத்திற்கு 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 



தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான, மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், 46 பேர், தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்றனர். அதில், கோவை மாவட்ட சைக்கிளிங் அசோசேசியன் சார்பில் எம்.சஞ்சய் சரவணன், கே.ஆர். வர்ஷினி, எம். பூஜா ஸ்வேதா, எம். ஶ்ரீஜித், தர்ஷன் மற்றும் கேசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, 2 தங்கம், 2 வெள்ளி, மற்றும் 4 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர். 



மேலும், கே.ஆர். வர்ஷினி மற்றும் சஞ்சய் சரவணன் தங்கப்பதக்கத்தையும், பூஜா ஸ்வேதா, ஶ்ரீஜித் ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தையும், தர்ஷன் மற்றும் கேசவராஜ் வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். குறிப்பாக, சஞ்சய் நேஷனல் ரோடு சைக்கிளிங் போட்டியில் வெள்ளியும், டிராக் சைக்கிளிங் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார். 

Newsletter