11வது ஈசா சாம்பியன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி : 22 அணிகள் பங்கேற்பு

கோவை : ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், உடற்கல்வி துறை சார்பில் 11வது ஈசா சாம்பியன் டிராபி-2019,.க்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவை : ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், உடற்கல்வி துறை சார்பில் 11வது ஈசா சாம்பியன் டிராபி-2019,.க்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 

இப்போட்டி, கல்லூரியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில், பிப்ரவரி 20 முதல் 22 வரையிலான தேதிகளில் நடைபெற்றது. நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியானது, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடைபெற்றது. இதில், 22 அணிகள் பங்கேற்றன. 

இதில், முதல் இடத்தை ஈசா கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியும், 3ம் இடத்தை நேரு தொழில்நுட்பக் கல்லூரியும் பிடித்தன. ரூ.6 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் முறையே வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டன.

 

இதன் நிறைவு விழாவில், கல்லூரி தலைமை செயல் அலுவலர் அஜித், நிர்வாக அலுவர் ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியினை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார். 

Newsletter