மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : அரையிறுதிக்கு கோவை அணி தகுதி

கோவை : கோவையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையேயான, 23 வயதுக்குப்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு கோவை அணி முன்னேறியது.



கோவை : கோவையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையேயான, 23 வயதுக்குப்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு கோவை அணி முன்னேறியது. 



கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம், டி.என்.சி.ஏ உடன் இணைந்து நடத்தும் இந்த போட்டி, பிப்.,19ம் தேதி பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியது. இதில், கோவை, தஞ்சாவூர், திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள அணிகள் பங்கேற்றன. 



எட்டு அணிகள் பங்கேற்ற முதல் ஆட்டத்தில், கோவை மற்றும் ஈரோடு அணிகள் தகுதி பெற்று கால் இறுதிக்கு முன்னேறின. அதையடுத்து, நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ஈரோடு அணியை, கோவை அணி அபாரமாக விளையாடி வென்றது. ஈரோடு அணி, 20 ஓவருக்கு, 91/9 என்ற கணக்கில், கோவை அணியிடம் தோல்வியை சந்தித்தது. 

Newsletter