தேசிய அளவில் பல்கலை.,க்கு இடையேயான பளு தூக்கும் போட்டி : 3 பதக்கங்களை வென்றது கோவை

கோவை : இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், கோவை மாவட்டத்திற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கோவை : இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில், கோவை மாவட்டத்திற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. 



கேரள மாநிலத்தில், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பல்கலை.,க்கு இடையேயான பளு தூக்கும் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகள் கடந்த பிப்.,20ம் தேதி தொடங்கியது. 9 எடை பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில், வெவ்வேறு பகுதியை சேர்ந்த 650க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். 



இதில், கோவையை சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர். அதில், 3 பேர் 2 தங்கம், மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றனர். பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பி.பிரபு தங்கப்பதக்கமும் (710 கிலோ பிரிவு), அதே கல்லூரியை சேர்ந்த சி.அறிவழகன் 807.5 எடை பிரிவில் தங்கப்பதக்கமும், 105 கிலோ எடை பிரிவில் எம் சந்தோஷ் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 



Newsletter