பெண்களுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி : ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி சாம்பியன்

கோவை : மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் ஶ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பெண்கள் அணி கோப்பையை வென்றது.

கோவை : மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் ஶ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பெண்கள் அணி கோப்பையை வென்றது. 



ஶ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் போட்டியில் கோவை மாநகரில் இருந்து சுமார் 22 அணிகள் கலந்து கொண்டன. போட்டித் தொடரை ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி தொடங்கி வைத்தார்.

இதில், பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு, ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியும், கற்பகம் கல்லூரி அணியும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில், 3-2 என்ற கணக்கில் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Newsletter