முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கோவை அணி வெற்றி

கோவை : சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கோவை அணி வெற்றி பெற்றது.

கோவை : சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கோவை அணி வெற்றி பெற்றது. 

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி சென்னையில் நடைபெற்று வந்தது. இதில், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 32 அணிகள் கலந்து கொண்டன. பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு, சென்னை, கோவை, திருநெல்வேலி மற்றும் கடலூர் அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. 

இதில், கோவை அணி தனது முதல் லீக் போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் கடலூர் அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து, 2-வது லீக்கில் 3-2 என்ற கணக்கில் திருநெல்வேலியையும், இறுதி லீக் போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் சென்னை அணியையும் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

வெற்றி பெற்ற அணிக்கு (வீரருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம்) ரூ. 12 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அதிகாரி ரவிச்சந்திரன், கோவை மாவட்ட வாலிபால் சங்கத்தின் செயலாளர் எம். வெங்கபதி ஆகியோர் வெற்றி பெற்ற கோவை அணிக்கு பாராட்டு தெரிவித்தனர். 

Newsletter