டாக்டர் ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் விளையாட்டு விழா

கோவை : காரமடை, டாக்டர் ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நடைபெற்றது.

கோவை : காரமடை, டாக்டர் ஆர்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று விளையாட்டு விழா நடைபெற்றது. 

இந்நிகழ்வில், கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் வே.ராமகிருஷ்ணன் தலைமையேற்றார். மேலும், இவர் எஸ்.ஆர்.எஸ்.ஐ பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி விளையாட்டினை தொடங்கி வைத்தார். இதையடுத்து, முதுநிலை இரண்டாம் ஆண்டு பயிலும் கணினிசார் வணிகவியல் துறை மாணவன் செல்வன் ரஞ்சித் தலைமையில், கல்லூரி மாணவர்கள் 20 பேர் இணைந்து, எஸ்.ஆர்.எஸ்.ஐ பள்ளியிலிருந்து கல்லூரி மைதானம் வரை ஒலிம்பிக் ஜோதியுடன் ஓடிவந்தனர்.



அதன் பின்னர், மைதானத்தில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி உறுதிமொழி ஏற்றனர். இவ்விழாவில், எஸ்.ஆர்.எஸ்.ஐ பள்ளியின் முதல்வர் லூசி தங்கராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தியதோடு, பல வகையான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கிப் பாராட்டினார். 



இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் தலைமையில், உடற்கல்வி இயக்குனர் திருப்பதி செய்திருந்தார். இந்நிகழ்வில், கல்லூரியின் அனைத்து துணைப்பேராசிரியர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். 



Newsletter