ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மார்ச் 2ம் தேதி ஹேக்கத்தான் போட்டி தொடக்கம்

கோவை : தொடர்ந்து 36 மணி நேரம் தூக்கமின்றி மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சியினை சமர்ப்பிக்கும் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி', ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது.

கோவை : தொடர்ந்து 36 மணி நேரம் தூக்கமின்றி மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சியினை சமர்ப்பிக்கும் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி', ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது. 

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் இணைந்து தேசிய அளவில் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியினை நடத்துகிறது. தொடர்ந்து 36 மணி நேரம் தூக்கமின்றி மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சியினை சமர்ப்பிக்கும் இந்த போட்டியின் இறுதி நிகழ்ச்சியினை இந்தியாவில் 50 மையங்களில் இந்த நிறுவனங்கள் நடத்தி வருகிறது. 



தமிழகத்தில் இதற்காக 6 மையங்கள் இம்முறை நடத்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கடந்த இரண்டு வருடம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் சுற்றுப்புறச்சூழல் மற்றும் வன அமைச்சகத்துடன் இணைந்து ஹேக்கத்தான் நிகழ்ச்சியினை நடத்தியது. 

இந்த வருடமும் இக்கல்லூரி இதற்காக சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மூன்று முறையாக இக்கல்லூரியினை மட்டுமே மத்திய அரசின் மனித வள மேம்பட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது. 

இந்த முறை, ஹேக்கத்தான் மார்ச் மாதம் 2, 3ம் தேதிகளில் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஹாலில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அளவில் பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள் ஆராய்ச்சியினை சம்பர்ப்பித்து போட்டியில், பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து 36 மணிநேரம் நடைபெறும் இந்த போட்டியில், சமர்ப்பிக்கும் சிறந்த ஆராய்ச்சிக்கு பரிசுகள் வழங்குவது மட்டுமின்றி, அதில் சிறந்த ஆராய்ச்சி படைப்புகளை பல நிறுவனங்கள் எடுத்து, தங்களின் நிறுவன மேம்பட எடுக்க உள்ளனர். 

மேலும், அப்பல்லோ மருத்துவமனை, இந்தியா ஹெல்த் லிங்க் நிறுவனம், டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனம்,க்ரீபி டெக்னாலஜி நிறுவனம் இந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சியில், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து செயலாற்ற உள்ளன. 

Newsletter