கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி : பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பார்க் கல்லூரி அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி தோற்கடித்தது.

கோவை : கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பார்க் கல்லூரி அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி தோற்கடித்தது.

பி.எஸ்.ஜி. கோப்பைக்கான தொடரில், சி.ஐ.டி. கல்லூரியில நடைபெற்ற இந்தப் போட்டியில், பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், பார்க் தொழில்நுட்பக் கல்லூரி அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த பி.எஸ்.ஜி. அணி, காட்வினின் அபார சதத்தால் (110 ரன்கள்), 25 ஒவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. கடின இலக்குடன் களமிறங்கிய பார்க் அணி, பி.எஸ்.ஜி., பவுலர்களின் சுழற்பந்துவீச்சை தாக்கிபிடிக்க முடியாமல் திணறினர். ஆதித்யா (5/6), ரோகித் ராம் (4/13) ஆகியோர் பந்துவீச்சில் அசத்த, பார்க் அணி 14.5 ஓவர்களில் 43 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம், 157 ரன்கள் வித்தியாசத்தில் பி.எஸ்.ஜி. அணி எளிதில் வெற்றி பெற்றது.

இதேபோல, காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், ராமகிருஷ்ணா அணி 24.5 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும், அசத்தல் பந்து வீச்சால் ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா அணியை வெறும் 19 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்றது.

Newsletter