கோவை பிரஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன்

கோவை : கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

கோவை : கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்தன. அரசு கலைக்கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி மைதானங்களில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகளின் முடிவில் சூப்பர் கிங்ஸ், யூனிக்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன. 



நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய சூப்பர் கிங்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. . இதையடுத்து, ஆடிய யூனிக்ஸ் அணி 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 23 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று மகுடத்தை சூடியது. இதைத் தொடர்ந்து, 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான ஆட்டத்தில் கில்லர்ஸ் கிரிக்கெட் கிளப் 3-வது இடத்தையும், ஆர்.பி.குரூப்ஸ் அணி 4-வது இடத்தையும் பிடித்தன. 

முதலிடம் பிடித்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரிசுக் கோப்பையுடன் சேர்த்து ரூ. 25,000-மும், 2-வது இடம் பிடித்த யூனிக்ஸ் அணிக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ. 15,000-மும் வழங்கப்பட்டது. அதேபோல, 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பிடித்த அணிகளுக்கு முறையே ரூ. 10,000, ரூ. 5,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. 



பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்க செயலாளர் சந்திரபிரகாஷ், குளோபல் கிச்சன்ஸ் நிறுவனர் ராஜவேல், பிரிக்கால் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் நடராஜன், கோவை நேரு கல்விக்குழும அலுவலர் முரளிதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். இந்த பரிசளிப்பு விழாவில் பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள், கிரிக்கெட் வீரர்கள் பலர் பங்கேற்றனர்.



Newsletter