மாநில அளவிலான கைப்பந்து போட்டி : பாவை பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்

கோவை : பி.எஸ்.ஜி., கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த பாவை பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை : பி.எஸ்.ஜி., கோப்பைக்கான கைப்பந்து போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த பாவை பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. 



கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் மாநில அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 அணிகள் கலந்து கொண்டன. லீக் முறைப்படி நடைபெற்ற இந்தப் போட்டியில், நாமக்கல்லைச் சேர்ந்த பாவை பொறியியல் கல்லூரி அணி மகுடத்தை சூடியது. இதைத் தொடர்ந்து, ஜேப்பியர் பொறியியல் கல்லூரி அணி 2-வது இடத்தைப் பிடித்தது. 



தொடர்ந்து, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி அணி 3-வது இடத்தையும், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தன. முதலிடத்தைப் பிடித்த பாவை பொறியியல் கல்லூரி அணிக்கு ரூ. 10,000-மும், அடுத்த 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ. 2,000-மும் வழங்கப்பட்டது. கே.சி.டி. அணியின் தமிழ் அன்பு இந்தத் தொடரின் சிறந்த கோல்கீப்பராகவும், பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியின் கார்த்திகேஷ் எமர்ஜிங் வீரராகவும், பாவை பொறியியல் கல்லூரி அணியின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 



Newsletter