4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டி : ரோகித்தின் அசத்தல் பந்துவீச்சால் இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி அபார வெற்றி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 4-வது டிவிசன் கிரிக்கெட் போட்டியில் இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி மற்றும் கோவை ரைடர்ஸ் கிரிக்கெட் அகாடமி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி 41 ஓவர்களுக்கு 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி பேட் செய்த கோவை ரைடர்ஸ் அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தது. 

குறிப்பாக, இ.ஏ.பி., அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரோகித், தனது பந்துவீச்சில் எதிரணியை மிரட்டினார். அவர் வெறும் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், கோவை ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 49 ரன்னுக்கு சுருண்டது. இதன்மூலம், 140 ரன்கள் வித்தியாசத்தில் இ.ஏ.பி., அணி அபார வெற்றி பெற்றது. 

ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெற்ற 2-வது டிவிசனில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், விங்ஸ் கிரிக்கெட் கிளப் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜசேகர் மணி நினைவு கிரிக்கெட் கிளப் அணி, தனது 6-வது வெற்றியைப் பதிவு செய்தது. 

Newsletter