தேசிய மாஸ்டர்ஸ் கேம்ஸ் போட்டியில் தமிழக பெண்கள் கூடைப்பந்து அணி சாம்பியன்

கோவை : தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில், தமிழக பெண்கள் கூடைப்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை : தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில், தமிழக பெண்கள் கூடைப்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகளின் கூட்டமைப்பு சார்பில் தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடைபெற்றது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இந்தத் தொடரின் முதல் போட்டியில், இமாச்சல் பிரதேசத்தை 40-22 என்ற கணக்கில்  தமிழக அணி தோற்கடித்தது. பின்னர், 2-வது போட்டியில், 30-16 என சத்தீஸ்கரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இறுதிப் போட்டியில் தமிழக அணி, உத்தரகாண்ட் அணியை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கோப்பையை வென்ற தமிழக அணியில் இடம்பிடித்த வீராங்கனைகளின் பெயர் பட்டியல் பின்வருமாறு :- எஸ். வித்யா (சென்னை), ஹேமாவதி அருண்குமார் (சென்னை), கே. சரண்யா (சென்னை), எம். ஷீபா பிரமோலா (கேப்டன், சென்னை), சுபாஷினி சுவாமிநாதன் (சென்னை), உஷா ஸ்ரீதர் (சென்னை), விஜயபிரியா ராஜகோபாலன் (சென்னை), ஜே. பிரபா (கோவை), எஸ். பவித்ரா (சென்னை), மீனா பி சிங் (கோவை), ஜே.பி. ஃபெமின் (நாகர்கோவில்), ஆனந்தி துரைசாமி (செங்கல்பட்டு).

இதுதவிர, தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல், நீச்சல், பேட்மிண்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கால்பந்து, ஹாக்கி மற்றும் கூடைப்பந்து ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது. 

Newsletter