பி.எஸ்.ஜி., கோப்பை கிரிக்கெட் போட்டியில் ராமகிருஷ்ணா கல்லூரி அணி சாம்பியன்

கோவை : பி.எஸ்.ஜி., கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வி.எல்.பி., கல்லூரி அணியை, 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராமகிருஷ்ணா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோவை : பி.எஸ்.ஜி., கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வி.எல்.பி., கல்லூரி அணியை, 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ராமகிருஷ்ணா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.



பி.எஸ்.ஜி., கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி அணியும் பலப்பரிட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த ராமகிருஷ்ணா கல்லூரி அணி 49.5 ஓவரில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக, அஜய் குமார் தாகா 56 ரன்களும், ஜெகதீசன் 44 ரன்களும் எடுத்தனர். இதைதொடர்ந்து, இலக்கை நோக்கி பேட் செய்த வி.எல்.பி. அணி, எதிரணியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீமின் (6/38)பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், அந்த அணி 31.5 ஓவரில் 101 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ராமகிருஷ்ணா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதேபோல, 3-வது இடத்திற்கான போட்டியில், மாருதி கல்லூரி அணி, அரசு கல்லூரி அணியை தோற்கடித்தது. 

இந்தத் தொடரில், சிறந்த விக்கெட் கீப்பராக வி.எல்.பி. கல்லூரி அணியின் எம். ஜெகனும், சக அணியின் வீரர் ஏ.வி.அபிலேஷ் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல, சிறந்த பந்துவீச்சாளராக ராமகிருஷ்ணா கல்லூரி அணியின் டி. மாதேஷ் குமாரும், சிறந்த பேட்ஸ்மேனாக என். முகமது ஆஷிக்கும் தேர்வாகினர்.

Newsletter