ஈசா பொறியியல் கல்லூரி சார்பில் 11-வது 5 பேர் கொண்ட கால்பந்து போட்டி தொடக்கம்

கோவை : ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் 2 நாட்கள் நடக்கும் 11-வது 5 பேர் கொண்ட கால்பந்து போட்டித் தொடர் நேற்று தொடங்கியது.

கோவை : ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் 2 நாட்கள் நடக்கும் 11-வது 5 பேர் கொண்ட கால்பந்து போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. 

நவக்கரை சாலையில் உள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் 11-வது ஈசா சாம்பியன் டிராபி 5 பேர் கொண்ட கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டிகள், 2 நாட்கள் நடக்கிறது. கல்லூரியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. 



நாக்-அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டிகள், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 16 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முதல் நாள் நடந்த போட்டியில், தனலட்சுமி ஶ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி அணி, ஈஷா கல்லூரி பி அணி, கற்பகம் கல்லூரி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

இந்தத் தொடரில், மகுடத்தைச் சூடும் அணிக்கு ரூ. 6,000 பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 3,000-மும், 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ. 2,000 பரிசு தொகையாகவும் வழங்கப்பட இருக்கிறது. 

இந்த 5 பேர் கொண்ட இந்தப் போட்டி தொடக்க நிகழ்ச்சியில், கல்லூரி தலைமை செயல் அலுவலர் அஜித், நிர்வாக அலுவர் ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter