இந்தியாவின் 61-வது கிராண்ட்மாஸ்டராக ஈரோடு மாணவன் தேர்வு

நொய்சியல் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது மாணவன், இந்தியாவின் 61-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார்.

நொய்சியல் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது மாணவன், இந்தியாவின் 61-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மோன்ட்காடா ஓபன் கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார் ஈரோட்டைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வம்.

ஜெர்மனியில் நடந்த 34-வது போப்ளிஜென் ஓபன் செஸ் கடந்த ஆண்டு ஸ்பெயினில் நடந்த பர்ன் என டெல் வேல்ஸ் ஓபன் செஸ் போட்டிகளில் பங்கேற்றார். 

மேலும், மாஸ்டர்ஸ்க்கான தரவரிசைப் பட்டியலில் 2.5 புள்ளிகள் எடுத்தால், 2,500 புள்ளிகளை எடுக்கும் நிலை இருந்தது. ஆனால், மாஸ்கோவில் நடந்த ஏரோஃப்ளாட் செஸ் தொடரில், ஒரு வெற்றி, 2 தோல்விகள்? 6 சமநிலை பெற்றார். இந்த நிலையில், நொய்சியல் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி இனியன், 2,500 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தார்.

“கடந்த 8 மாதங்களாக 2,485 முதல் 2,495 என்ற இடைப்பட்ட புள்ளிகளிலேயே நீடித்தேன். தற்போது,2,500 புள்ளிகளை கடந்துவிட்டேன். எனது அடுத்த இலக்கு 2,600 புள்ளிகளை எட்டுவதுதான்,” என்றார் இனியன் பன்னீர்செல்வம். 

இதனிடையே, “2,500 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்த இனியன், இந்தியாவின் 61-வது கிராண்ட்மாஸ்டர்,” என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார் விஸ்வநாத ஆனந்த்.

Newsletter