பி.எஸ்.ஜி. டெக் மினி மாரத்தான் போட்டியில் 1,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை : பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற பி.எஸ்.ஜி. டெக் மினி மாரத்தான் போட்டியில் 1,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை : பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற பி.எஸ்.ஜி. டெக் மினி மாரத்தான் போட்டியில் 1,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உடற்கல்வித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான 7.5 கி.மீ. தொலைவு, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 4.5 கி.மீ. தொலைவு என இருபிரிவுகளில் இந்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில், பி.எஸ்.ஜி.,கல்லூரி மாணவர்கள் மற்றும் பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என 1,245 பேர் இந்த மாரத்தானில் பங்கேற்றனர். 



இந்த மாரத்தான் ஓட்டத்தை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஆர். ருத்ரமூர்த்தி மற்றும் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கிரிராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, ஃபன் மால் புது திட்ட சாலை, ஜி.வி. ரெசிடென்சி, உப்பிலி பாளையம், மசக்காளி பாளையம், சவுரி பாளையம், ஃபன் மால் சாலையைக் கடந்து பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி வழியாக நடைபெற்றது. 



ஆண்கள் தரப்பில் 27.24 நிமிடங்களில் இ.சி.இ. 2 ஆம் ஆண்டு மாணவர் ஏ. இசக்கிமுத்துவும், பெண்களுக்கான பிரிவில் 27.10 நிமிடத்திலும் இலக்கை அடைந்தனர். மேலும், முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. 

Newsletter