தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி : முதன்முறையாக ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்

கோவை : கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : கர்நாடகாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

மணிப்பால் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவில் நடைபெற்ற இந்த டுவென்டி டுவென்டி போட்டித் தொடரில் 14 அணிகள் கலந்து கொண்டன. அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர், இதில், தேர்வு செய்யப்பட்ட 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றில் மோதின. இதில், முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணி (139/8) தனது அரையிறுதிப் போட்டியில் அமிர்தா பல்கலைக்கழக அணியை (127 ரன்கள்) 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 



இறுதிப் போட்டியில், போட்டியை நடத்தும் மணிப்பால் தொழில்நுட்பக் கல்லூரியும், கோவையைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி, யோக்ஸின் அபார அரை சதத்தால் (57 ரன்கள்) 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து, விளையாடிய மணிப்பால் அணியால் 120 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன்மூலம், 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

Newsletter