கே.சி.டி. நிறுவனர் தினத்தை முன்னிட்டு செஸ் போட்டி : முதல் பரிசை வென்ற தேவதர்சன், மிரினலினி

கோவை : கே.சி.டி. நிறுவனத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட செஸ் போட்டியில் தேவதர்சன் மற்றும் மிரினலினி ஆகியோர் முதல் பரிசை வென்றனர்.

கோவை : கே.சி.டி. நிறுவனத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட செஸ் போட்டியில் தேவதர்சன் மற்றும் மிரினலினி ஆகியோர் முதல் பரிசை வென்றனர். 



குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் நா. மகாலிங்கத்தின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று முதல் 24-ம் தேதி வரை அக்கல்வி நிறுவனங்களின் சார்பில் நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று செஸ் போட்டி நடத்தப்பட்டது. 9, 12, 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் ஓபன் ஆகிய பிரிவுகளில் ஸ்விஸ் முறைப்படி இப்போட்டி நடைபெற்றது. 

இதில், 9 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தேவதர்சன் மற்றும் மிரிநலினியும், 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் நந்திஷ் மற்றும் ஷெர்லினாவும், 15 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மிதுன் குமார் மற்றும் ரோஸிவ் ஆகியோரும், ஓபன் பிரிவில் தனசேகரும் ஆகியோர் முதல் பரிசை வென்றனர். 

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு மொத்தம் ரூ. 30,500 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter