மாவட்ட அளவிலான த்ரோ பால் போட்டியில் ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி அணி சாம்பியன்

கோவை : நர்சிங் கல்லூரி ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான த்ரோ பால் போட்டியில் ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி அணி கோப்பையை வென்றது.

கோவை : நர்சிங் கல்லூரி ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான த்ரோ பால் போட்டியில் ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி அணி கோப்பையை வென்றது.

ஜெம் நர்சிங் மருத்துவமனை சார்பில் நர்சிங் கல்லூரி ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான த்ரோ பால் போட்டி கோவை நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஒரு நாள் நடந்த இந்தத் தொடரில் மாவட்டத்தில் இருந்து 8 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இதில், ராமகிருஷ்ணா, டெக்ஸிட்டி, ஆர்.வி.எஸ். நர்சிங் மற்றும் ஜே.கே.கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதில், ஜே.கே.கல்லூரி அணியை தோற்கடித்து ராமகிருஷ்ணா கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு புறம் ஆர்.வி.எஸ். கல்லூரியை வீழ்த்தி டெக்ஸிட்டி அணி இறுதிக்கு முன்னேறியது.



இறுதிப்போட்டியில், ராமகிருஷ்ணா அணி 15:9,15:11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மகுடத்தை சூடியது. வெற்றி பெற்ற அணிக்கு ஜெம் மருத்துவமனை கல்லூரி அணியின் தலைவர் ரவீந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் நதியா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Newsletter