சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் களம் காணும் கோவை துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை

கோவை : இத்தாலியில் நடைபெற இருக்கும் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் கோவையைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை நிவிதா களமிறங்க இருக்கிறார்.

கோவை : இத்தாலியில் நடைபெற இருக்கும் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் கோவையைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை நிவிதா களமிறங்க இருக்கிறார். 

வரும் ஜுலை 3-ம் தேதி 30-வது சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி இத்தாலியில் நடைபெற இருக்கிறது. இதில், கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை படிப்பை படித்து வரும் பி. நிவிதா, துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள நிவிதா, அண்மையில் சண்டிகரில் நடைபெற்ற அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 576 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 8 பேர் சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை நிவிதா தேர்வாகியிருப்பது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளது. 

இந்த நிலையில், சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இருக்கும் நிவிதாவிற்கு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டி. பிருந்தா, உடற்கல்வி இயக்குநர் பி. நவநீதன் மற்றும் உதவி உடற்கல்வி இயக்குநர் சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter