தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி திருப்பூரில் தொடக்கம்

திருப்பூர் : தென்னிந்திய அளவிலான 'மஹி'ஸ் கால்பந்து திருவிழா திருப்பூரில் இன்று தொடங்கியது.


திருப்பூர் : தென்னிந்திய அளவிலான 'மஹி'ஸ் கால்பந்து திருவிழா திருப்பூரில் இன்று தொடங்கியது. 



மஹி'ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டியானது, மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு என இருபாலாருக்கும் நடக்கிறது. ஒரு அணிக்கு 5 வீரர்களை மட்டுமே கொண்ட இந்தப் போட்டி 10 வயதிற்குட்பட்டோர், 12 வயதிற்குட்பட்டோர் என இரு பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. நாக் அவுட் முறையில் நடத்தப்படும் இந்தப் போட்டியில், 12 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 10 மாணவிகள் அணி உள்பட மொத்தம் 64 அணிகள் கலந்து கொண்டன. 



முதல்நாள் போட்டியில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்களும் தங்களது முழு திறனை வெளிப்படுத்தினர். இந்தத் தொடரை மஹி'ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் மோதிலால் தொடங்கி வைத்தார். 

Newsletter