மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி : கோவை அணி அரையிறுதிக்கு தகுதி

கோவை : தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோவை அணி அரையிறுதிக்கு முன்னேறியது.


கோவை : தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோவை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

திங்கட்கிழமை தொடங்கிய இத்தொடரின் காலிறுதி போட்டி ஒன்றில் திருப்பூர் மற்றும் கோவை அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த திருப்பூர் அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இதனால், முதல் இன்னனிங்சில் அந்த அணி ௮௧ ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து, பேட் செய்த கோவை அணி, ஹரி சங்கரின் அசத்தல் சதத்தால் (182), 7 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. மிகவும் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை ஆடிய திருப்பூர் அணி மீண்டும் 69 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம், இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கோவை அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 



Newsletter