தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோவை வீரர்

கோவை : மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கோவை வீரர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

கோவை : மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கோவை வீரர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தேசிய ரைபிள் சங்கம் சார்பில் 28-வது ஜி.வி. மவலான்கர் பிக் போர் துப்பாக்கிச்சுடும்

தேசிய அளவிலான போட்டி இந்தூரில் கடந்த 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், ஆண்கள் தனிப்பிரிவில் கோவை ரைபிள் கிளப்பைச் சேர்ந்த வி. அருண் பங்கேற்றார். 



இந்தப் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த அர்ஷ்தீப் சிங்கை விட அருண் (286/300) 3 புள்ளிகள் குறைவாக பெற்று 2-வது இடம் பிடித்தார். இதன்மூலம், வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தத் தொடருக்கான பயிற்சிக்கு போதுமான வசதிகளை கோவை ரைபிள் கிளப் ஏற்படுத்தி தராத நிலையிலும், அருண் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. இருப்பினும், கே.எஸ். செந்தில் குமார் மற்றும் கிளப்பின் மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, 2 வாரங்களாக 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் பயிற்சி பெற்றார்.

இருப்பினும், காலநிலை அவருக்கு ஏற்றாற்போல அமையாததால், இந்தத்தொடரில் அதிகபட்சமாக 386 புள்ளிகளை பிடித்துள்ளார்.

Newsletter