தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு கோவை கற்பகம் பல்கலை., மாணவன் தேர்வு

கோவை : புரோ கபடி லீக் தொடரில் விளையாடும் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் தேர்வாகியுள்ளார்.

கோவை : புரோ கபடி லீக் தொடரில் விளையாடும் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் தேர்வாகியுள்ளார்.

புரோ கபடி லீக் போட்டிகள் கபடி விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்தது. உள்ளூர்களிலும், தெருக்களிலும் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், தற்போது நாட்டின் சிறந்த கபடி வீரர்களாக ஜொலிக்கிறார்கள். குறிப்பாக, நமது பாரம்பரிய விளையாட்டான கபடி அழிவின் விளிம்பிலிருந்து, புரோ கபடி லீக் போட்டியின் மூலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2017-ம் ஆண்டில் தமிழ் தலைவாஸ் கபடி அணி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நடப்பு சீசனில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடுவதற்கு, கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் வி. அஜித்குமார் தேர்வாகியுள்ளார். 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் குமாரின் கபடி வாழ்க்கையானது, நண்பர்களுடன் தெருக்களில் விளையாடியும், உள்ளூர் தொடர்களில் பங்கேற்பதிலும் தொடங்கியது. அவரது திறமையை பார்த்து அசந்து போன அவரது சகோதரர், அஜித்தை பயிற்சி மையத்தில் சேர்த்தார். 

"நான் 11-ம் வகுப்பு படிக்கும் போது, பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் பேரிலும், எனது கடின உழைப்பினாலும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான தொடர்களுக்கு தேர்வாகினேன். பின்னர், 2016-ம் ஆண்டு முதல்முறையாக தேசிய ஜுனியர் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டேன். தற்போது தமிழ் தலைவாஸ் அணிக்கு தேர்வாகியிருப்பது, என்னை நிரூபிக்க தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன். இந்த நிலையை அடைவதற்கு நான் மிகவும் கடினமாக உழைத்தேன். இந்திய அணிக்கு உலகக் கோப்பைக்காக விளையாடுவதே எனது இலக்கு," என்றார் கபடி வீரர் அஜித் குமார். 

நாள்தோறும் காலை 4.30 மணிக்கு கபடி மைதானத்திற்கு செல்லும் அவர் காலை 8 மணி வரை பயிற்சியில் ஈடுபடுகிறார். பின்னர், கல்லூரி வகுப்பு முடிந்தவுடன் மாலை வேளையில் 4 மணிநேரம் பயிற்சி செய்கிறார். இவரது இந்த கடினமாக உழைப்பு அவரை மிகப்பெரிய சாதனையாளராக மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

Newsletter