கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 108-வது ஆண்டு விளையாட்டு விழா

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 108-வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 108-வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.



108-வது ஆண்டு விளையாட்டு விழாவில், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் முனைவர் டி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். வேளாண் பல்கலை.,யின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஜி. ராகவன் முன்னிலையில், மாணவ, மாணவியர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கோ-கோ, கபடி, இறகுப்பந்து, மட்டைப்பந்து மற்றும் ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.



இதில், வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கும், குழுக்களுக்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் என். குமார், முதன்மையர் வேளாண்மை முனைவர் எம். கல்யாணசுந்தரம், முதன்மையர் மாணவர் நல இயக்குநர் முனைவர் டி. ரகுசந்தர் மற்றும் முதன்மையர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்வி முனைவர் பி. ஸ்ரீதர் ஆகியோர் பரிசுகளையும், சுழற்கோப்பையையும் வழங்கினர்.



Newsletter