மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி : கோவை அணி சொதப்பல் ஆட்டம்

கோவை : கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், திருவள்ளூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி 143 ரன்களுக்கு சுருண்டது.

கோவை : கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், திருவள்ளூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி 143 ரன்களுக்கு சுருண்டது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்குப்பட்டோருக்கான 3 நாள் கிரிக்கெட் போட்டிகள் கோவையில் இன்று தொடங்கியது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணியும், கோவை மாவட்ட அணியும் மோதின. முதலில் பேட் செய்த கோவை அணி 60.4 ஓவர்களில் 143 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹரி சங்கர் 39 ரன்களை எடுத்தார். திருவள்ளூர் அணி தரப்பில் அரவிந்த் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதைத் தொடர்ந்து, பேட் செய்த திருவள்ளூர் அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 29 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன் எடுத்துள்ளது. ராம் அர்விந்த் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

Newsletter