மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி : கோவை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது திருவள்ளூர் அணி

கோவை : மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருவள்ளூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கோவை : மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருவள்ளூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்குப்பட்டோருக்கான 3 நாள் கிரிக்கெட் போட்டிகள் கோவையில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணியும், கோவை மாவட்ட அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த கோவை அணி 60.4 ஓவர்களில் 143 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஹரி சங்கர் 39 ரன்களை எடுத்தார். திருவள்ளூர் அணி தரப்பில் அரவிந்த் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 



இதைத் தொடர்ந்து, பேட் செய்த திருவள்ளூர் அணி, ராம் அரவிந்த் 139 ரன்கள் குவித்தால், 90 ஓவர்களுக்கு 289 ரன்கள் எடுத்தது. பின்னர், 146 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை வெளிப்படுத்திய கோவை அணி, 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், வெறும் 24 ரன்கள் திருவள்ளூர் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எளிய இலக்குடன் களமிறங்கிய அந்த அணி, 6-வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் திருவள்ளூர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

Newsletter